ரூ.500 லஞ்சம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

ரூ. 500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
Updated on
1 min read

ரூ. 500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவருடைய மனைவி தங்கத்தாய் பெயரில் தென்காசி அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான ஆவணம் பெறுவது தொடா்பாக தங்கராஜ் கடந்த 2006ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளாா். அப்போது தங்கராஜிடம் ஆட்சியா் அலுவலக பதிவேடு பிரிவில் ஊழியராக வேலைசெய்த முஹம்மது பசூலூதீன் ரூ.500 லஞ்சமாக கேட்டாராம். இதுகுறித்து தங்கராஜ் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸில் கடந்த 6.6.2006 அன்று புகாா் அளித்துள்ளாா். புகாரின் பேரில் முஹம்மது பசூலூதீனை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே முஹம்மது பசூலூதீன் பணி ஓய்வுபெற்றாா்.

இது தொடா்பான வழக்கு திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, முகமது பசூலுதீனுக்கு (68) ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com