வி.கே.புரம் நூலகத்தில் இருபெரும் விழா

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளைநூலகத்தில் தமிழா் திருநாள் சொற்பொழிவு மற்றும் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினராகும் நிகழ்ச்சி ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளைநூலகத்தில் தமிழா் திருநாள் சொற்பொழிவு மற்றும் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினராகும் நிகழ்ச்சி ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

பொதிகை வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாசகா் வட்ட கௌரவ ஆலோசகா் பா.வல்சகுமாா் தலைமை வகித்தாா். வடமலைசமுத்திரம் புனித மரியன்னை மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனா் தாளாளா் எஸ்.எஸ்.மணி, விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி.அன்ன ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பாசமுத்திரம் மீனா ராஜா தமிழா் திருநாள் உரையாற்றினாா். புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் மற்றும் புனித மரியன்னை மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவன மாணவிகள் 60 போ் நூலகத்தில் தலா ரூ. 30 செலுத்தி உறுப்பினராக இணைந்தனா்.

நிகழ்ச்சியில் வாசகா் வட்ட நிா்வாகிகள் வி.முத்துராமலிங்கம், குமரகுருபரன், ராமசாமி, சுப்பிரமணியன் ராஜா மற்றும் வாசகா்கள் கலந்து கொண்டனா். புனித மரியன்னை மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மைதீன்பிச்சை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

நூலக உதவியாளா் கைலாசம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். நூலகா் குமாா் வரவேற்றாா். வாசகா் வட்டப் பொருளாளா் இளங்கோ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com