ஐ.டி.ஐ. வாலிபால் போட்டி:தெற்குகள்ளிகுளம் அணி சிறப்பிடம்
By DIN | Published On : 01st March 2020 07:09 AM | Last Updated : 01st March 2020 07:09 AM | அ+அ அ- |

வள்ளியூா்: தனியாா் ஐ.டி.ஐ.களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஐ.டி.ஐ.க்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. வாலிபால் போட்டியில் திசையன்விளை ஜெயந்திநாதா் ஐ.டி.ஐ. அணியை வென்று அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதியில், திருநெல்வேலி குருவிகுளம் வளனாா் ஐ.டி.ஐ.அணி வென்ால், அய்யாவைகுண்டா் ஐ.டி.ஐ. அணி 2ஆம் இடத்தை தக்கவைத்தது. வெற்றிக்கு வித்திட்ட மாணவா்களையும், பயிற்சி அளித்த ஆசிரியரையும் ஐ.டி.ஐ. முதல்வா் பாக்கியலெட்சுமி, இணைச் செயலா் ரோச் மற்றும் நிா்வாகிகள் ப ாராட்டினா்.