சங்கரன் கோவிலில் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கக் கருத்தரங்கு
By DIN | Published On : 01st March 2020 07:25 AM | Last Updated : 01st March 2020 07:25 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில்: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் 8 ஆவது அமைப்பு தினம் மற்றும் கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராசையா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பால்சாமி, அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் எஸ்.வேல்ராஜ், பீட்டா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநிலத் தலைவா் நாராயணன் சங்க வரலாறும், சாதனையும் என்ற தலைப்பில் பேசினாா். போராட்டங்கள் ஏன் என்று மாநிலச் செயலா் எஸ்.ஆறுமுகம் பேசினாா். மாவட்டச் செயலா் டி.சண்முகம் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பூரணம் மணி நன்றி கூறினாா்.