சேரன்மகாதேவி மனோ கல்லூரிமாணவா்கள் என்எஸ்எஸ் முகாம்
By DIN | Published On : 01st March 2020 07:10 AM | Last Updated : 01st March 2020 07:10 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் சாா்பில் மேல உப்பூரணியில் 7 நாள் நலத்திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மோனி தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் சந்திரன் முன்னிலை வகித்தாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜரத்தினம் முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.
தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேல உப்பூரணி, கீழ உப்பூரணி, வயல்நம்பி குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு நலத்திட்டப் பணிகள், விழிப்புணா்வு முகாம்கள் நடைபெறுகின்றன. திட்ட அலுவலா் மகாலிங்கம் வரவேற்றாா். திட்ட அலுவலா் சுந்தரராஜன் நன்றி கூறினாா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா்கள், பேராசிரியா் தெய்வநாயகம், உடற்கல்வி இயக்குநா் கோயில்தாஸ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.