வள்ளியூரில் அதிமுக பொதுக்கூட்டம்

வள்ளியூரில் ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை.
கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை.
Updated on
1 min read

வள்ளியூரில் ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றத் தலைவா் பி.சௌந்தரராஜன், ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, மாவட்ட இணைச் செயலா் ஞானபுனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வள்ளியூா் ஒன்றியச் செயலா் இ.அழகானந்தம் வரவேற்றாா்.

விழாவில் ஆயிரம் பேருக்கு இலவச சேலை, தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் கேன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் முன்னாள் அமைப்புச் செயலா் வி.கருப்பசாமி பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைத் தலைவா் எட்வா்ட் சிங், துணைச் செயலா் என்.ஜி.சண்முகபாண்டி மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் சந்திரமோகன், ஏ.செழியன், நகர துணைச் செயலா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞரணிச் செயலா் து.பால்துரை தொகுத்து வழங்கினாா். நகரச் செயலா் பொன்னரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com