வள்ளியூா்: வள்ளியூரில் விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட மகளிா் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் தொடக்கமாக தெய்வாணை இறைவணக்கம் பாடினாா். ந.கிருஷ்ணமூா்த்தி விளக்கிப் பேசினாா். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்டச் செயலா் சு.ஐயப்பன், விவேகானந்த கேந்திர திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளா் ஜானகிபுஷ்பம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியன், முதல்வா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து விவேகானந்த கேந்திர பாலா் பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சண்முகபாரதி வரவேற்றாா். வசந்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.