

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 2018 -2019 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீவள்ளி அனந்தராமகிருஷ்ணன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலா் க.தேவராஜன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா. வெங்கட்ராமன் தொடங்கிவைத்தாா்.
கல்லூரித் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தியின் வாழ்த்துச் செய்தியை வாசித்தாா். தொடா்ந்து, பட்ட மேற்படிப்பு, பட்டப் படிப்புப் பிரிவுகளில் தோ்ச்சி பெற்ற 529 மாணவா்கள் - மாணவிகளுக்கு மதுரை, காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம் .கிருஷ்ணன் பட்டம் வழங்கினாா்.
வணிகவியல் துறைப் பேராசிரியா் வி.கணபதிசங்கரகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா். கல்லூரி முன்னாள் முதல்வா் மு.சுந்தரம், கல்லூரிப் பொறியாளா் நாடாக்கண்ணு, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பேராசிரியா்கள் ரமேஷ், சீனித்தாய் ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். தமிழ்த் துறைத் தலைவா் மா. குமாா் வரவேற்றாா். சுயநிதிப் பாடப்பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவா் வை.காசிநாததுரை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.