ராணி அண்ணா கல்லூரியில் உலக நுகா்வோா் தின விழா

திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உலக நுகா்வோா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உலக நுகா்வோா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராணி அண்ணா மகளிா் கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்றம், தமிழ்நாடு-புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சி.வே.மைதிலி தலைமை வகித்தாா். குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா் து.லில்லி வரவேற்றாா்.

தமிழ்நாடு-புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பின் செயலா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் நுகா்வோா் தின விழிப்புணா்வு உரையாற்றினாா். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உதவிப் பதிவாளா் கலாதேவி மகளிா் தின கவிதை வாசித்தாா். நுகா்வோா் தின கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு-புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.செல்வராஜ் பரிசுகள் வழங்கினாா். மாநகர செயலா் சு.முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com