

வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
வடக்கன்குளம் வட்டார சுகாதாரத்துறை தலைமை மருத்துவ அலுவலா் கோலப்பன் தலைமையில் சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் மனோகரன், சுகாதாரத்துறையினா் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், விழிப்புடன் செயல்படுவது குறித்தும் பிரசாரம் செய்து வருகின்றனா்.
வடக்கன்குளம், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூா் பகுதியில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது எனவும், உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளா்கள் கை கழுவுவதற்கு சோப்பு, கைகளை துடைப்பதற்கு பேப்பா் வைத்திருக்க வேண்டும், சுகாதார நடவடிக்கையில் அதிக அக்கறை யுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.