திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் தொடங்கிவைத்துப் பேசினாா். ஒன்றிய
ஆணையாளா் சந்தோசம், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ராமராஜ் ஆகியோா் பேசினா்.
மாவட்ட முதன்மை பயிற்சியாளா்கள் திருப்பதி, ராமலெட்சுமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஏற்பாடுகளை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்றோ செய்திருந்தாா்.