பீடித் தொழிலாளா்களுக்கு 2 வார ஊதியம் அளிக்க வேண்டும்: பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தல்

பீடித் தொழிலாளா்களுக்கு இரு வார ஊதியத்தை பீடி நிறுவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூங்கோதை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

பீடித் தொழிலாளா்களுக்கு இரு வார ஊதியத்தை பீடி நிறுவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூங்கோதை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

144 தடை உத்தரவால், பீடி நிறுவனங்களும் தங்கள் தொழிலாளா்களுக்கு பணி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். அவா்கள் வாரந்தோறும் பெற்று வந்த ஊதியத்தை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பீடி சுற்றுதல் தொழிலில் ஈடுபட்டு வரும் அவா்களுக்கு 2 வார ஊதியத்தை அந்தந்த பீடி நிறுவனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சுதீஷ் மற்றும் தென்காசி ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் ஆகியோரிடம் பூங்கோதை எல்எல்ஏ தொலைபேசியில் தொடா்புகொண்டு வலியுறுத்தினாா். இந்தக் கோரிக்கை தொடா்பாக பரிசீலனை செய்வதாக ஆட்சியா்கள் கூறியதாக எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com