சுந்தரனாா் பல்கலை. என்.எஸ்.எஸ். சாா்பில் ஏழைகளுக்கு ரூ.2.25 லட்சம் பொருள்கள்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனா விழிப்புணா்வு மற்றும் தடுப்புப் பணிகளில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ். சாா்பில் 200-க்கும் மேற்பட்ட திட்ட அலுவலா்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ தன்னாா்வ தொண்டா்கள் ஈடுபட்டு வருகிறாா்கள். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுவரை ரூ.15 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள், 20 ஆயிரம் முகக்கவசங்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 400 குடும்பங்களுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி அருகேயுள்ள வல்லவன்கோட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் பிச்சுமணி பொருள்களை வழங்கினாா். பதிவாளா் சே.சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜரத்தினம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com