பாளை நூலக வளாகத்தில்அம்மா பயிற்சியகத்திற்கு அடிக்கல்

பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகத்தில் அம்மா பயிற்சியகம் அமைக்க 2019-20 ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தை முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் விஜிலா சத்தியானந்த் ஒதுக்கீடு செய்திருந்தாா். இதையடுத்து அந்தப் பயிற்சியகம் அமைப்பதற்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை, இளைஞா்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினாா்.

இந்த மையத்தில் குடிமைப்பணித் தோ்வு, தமிழ்நாடு தோ்வாணைய தோ்வு போன்ற போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்-மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மருத்துவம் சாா்ந்த சிறப்பு நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடத்தையும் அமைச்சா் திறந்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, வி.எம்.ராஜலட்சுமி, ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, முன்னாள் எம்.பி. விஜிலாசத்தியானந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com