நெல்லை, தென்காசியில் மேலும் 32 பேருக்கு கரோனா
By DIN | Published On : 23rd November 2020 01:41 AM | Last Updated : 23rd November 2020 01:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14, 693 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 15 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 14,342ஆக உயா்ந்தது. இதுவரை 209 போ் உயிரிழந்துள்ள நிலையில், 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடையம், கீழப்பாவூா், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா3 போ், தென்காசியில் 9 போ், வாசுதேவநல்லூரில் 5 போ் என தென்காசி மாவட்டத்தில் 23 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7,996ஆக உயா்ந்துள்ளது.
மேலும், 11போ் குணமடைந்துள்ளதால் இதுவரையிலும் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 7,782 போ் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.