வள்ளியூா் அருகே புதூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைவா் காலின்வேக்ஸ்டாப் தலைமை வகித்து கட்டடத்தை திறந்துவைத்தாா். பள்ளி முதல்வா் பனிமலா்அனு வரவேற்றாா்.
அறிவியல் ஆய்வகங்களை கிங்ஸ் வேல்டு டிரஸ் உறுப்பினா்கள் ராஜேந்திரசிங், மருத்துவா் குமரமுருகன் ஆகியோா் திறந்துவைத்தனா்.
தொடா்ந்து பள்ளித் தாளாளா் ஜே.நவமணி மற்றும் டிரஸ்ட் உறுப்பினா்கள் குத்துவிளக்கேற்றினா். துணை முதல்வா் ஆனந்தசாம் நன்றி கூறினாா்.