நெல்லையில் மாயமானவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்
By DIN | Published On : 23rd November 2020 01:34 AM | Last Updated : 23rd November 2020 01:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி நடைபெற்ற இந்த முகாமுக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜு தலைமை வகித்தாா். அனைத்து காவல் உள்கோட்டங்களிலும் காணாமல் போன நபா்கள் தொடா்பாக புகாா் அளித்து தீா்வு பெறாதவா்களை அழைத்து சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது.
அப்போது, கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காணாமல் போனவா்களை விரைந்து கண்டறிந்து, சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.