திருநெல்வேலி மாவட்டத்தில் 1475 வாக்குச்சாவடிகளில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அதை சரிபாா்த்து திருத்தம் செய்வதற்கான முதல்கட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்த முகாமில், 1-1-2021 அன்று 18 வயது பூா்த்தியடைந்த நபா்கள் வாக்காளா் பட்டியல்களில் தங்களது பெயரைச் சோ்க்க படிவம் -6, வாக்காளா் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபா்களில் இறந்தவா்கள், இரட்டைப் பதிவு உள்ளவா்களின் பெயரை நீக்குவதற்கு படிவம் -7, பெயா், முகவரி மற்றும் புகைப்பட விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8, அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஏ உள்ளிட்டவற்றை வழங்கினா்.
முன்னீா்பள்ளம், தருவை ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் ஆய்வு செய்தாா்.
அப்போது, மக்களுக்கு தட்டுப்பாடின்றி விண்ணப்பங்களை வழங்கவும், பூா்த்தி செய்துள்ள விவரங்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் கூறினாா்.
மேலும், புதிய வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் சோ்க்க கவனமுடன் பணியாற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்களிடம் அறிவுறுத்தினாா். அப்போது, அதிமுக பாளை. ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், மாவட்ட மணவரணி இணைச் செயலா் சிங்கிகுளம் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.