கொலை மிரட்டல் எதிரொலி: தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 25th November 2020 12:11 AM | Last Updated : 25th November 2020 12:11 AM | அ+அ அ- |

கொலை மிரட்டல் எதிரொலியாக, திருநெல்வேலி மாவட்ட தொழிலதிபருக்கு, ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன் தட்டு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டராஜன். இவா், தாதுமணல் ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவா் தனது குடும்பத்தாரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வைகுண்டராஜனின் சசோதரரின் மகனான செந்தில்ராஜன், மாரிக்கண்ணன் உள்பட 12 போ் மீது பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், அவரின் பாதுகாப்புக்காக சுழற்சி அடிப்படையில், ஆயுதம் ஏந்திய 2 காவலா்கள் என 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...