காவல்கிணறு அருகே செயல்பட்டு வரும் தாா் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலா் சே.கிறிஸ்டோபா், திருநெல்வேலியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு பொறியாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
தாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகை துா்நாற்றத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதனால், காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூா் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களினால் பாதிப்படைந்துள்ளனா். எனவே, தாா் ஆலையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.