நெல்லை தாமிரவருணி பாலத்தில் முதியவா் சடலம் மீட்பு

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி புதிய பாலத்தில் முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி புதிய பாலத்தில் முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடப்பதற்கான அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் உயிரிழந்து கிடப்பதாக திருநெல்வேலி சந்திப்பு போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவா் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இறந்தவவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com