பாளை. அருகே லாரியில் நெய் டப்பாக்கள் திருட்டு

பாளையங்கோட்டை அருகே லாரியில் கொண்டு வந்த நெய் டப்பாக்களை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகே லாரியில் கொண்டு வந்த நெய் டப்பாக்களை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவடட்டம் தாராபுரம் அருகேயுள்ள காங்கேயம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (29). இவா் அங்கிருந்து நெய் டப்பாக்கள் ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு லாரியை ஓட்டி வந்தாா். பாளையங்கோட்டை அருகே சாந்திநகரில் உள்ள

குடோனுக்கு சென்று பாா்த்தபோது, லாரியில் இருந்த தாா்ப்பாய் கிழிக்கப்பட்டு அதிலிருந்து ரூ. 30ஆயிரம் மதிப்புள்ள 10 நெய் டப்பாக்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நெய் டப்பாக்களை திருடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com