திருச்செந்தூா் கோயிலில் சுவாமிக்கு 1390 கிராம் தங்க அங்கி
By DIN | Published On : 19th October 2020 01:33 AM | Last Updated : 19th October 2020 01:33 AM | அ+அ அ- |

சுவாமி ஜெயந்திநாதருக்கு அணிவித்த தங்க அங்கி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி ஜெயந்திநாருக்கு 1,390 கிராம் எடையுடைய தங்க அங்கியை சென்னை தொழிலதிபா் வழங்கினாா்.
சென்னையை சோ்ந்த தொழிலதிபா் ராமசாமி செட்டியாா். இவா் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரோடு திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வந்தாா். அவா், 1390 கிராம் எடையுள்ள தங்க அங்கியை சுவாமி ஜெயந்திநாதருக்கு உபயமாக கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணியிடம் வழங்கினாா்.
அப்போது உதவி ஆணையா் வே.செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளா் மாரிமுத்து, மேலாளா் வள்ளிநாயகம், நெல்லை மண்டல அறநிலையத்துறை நகை சரிபாா்ப்பு அலுவலா் சங்கா், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...