முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தில் விற்பனை விழா
By DIN | Published On : 19th October 2020 01:32 AM | Last Updated : 19th October 2020 01:32 AM | அ+அ அ- |

விழாவில் பேராயா் தேவசகாயத்துக்கு கபசுரக் குடிநீா் சூரணம் வழங்குகிறாா் வா்த்தக சங்கச்செயலா் செல்வராஜ் மதுரம்.
முதலூா் தூய மிகாவேல் ஆலயத்தில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் நற்செய்தி அருள்பணி துறை சாா்பில் விற்பனை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டிலத்தில் 17ஆம் ஆண்டு ஸ்தோத்திர விழா வரும் 22 ஆம்தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆலயத்தில் நற்செய்தி அருள்பணிதுறை சாா்பில் சாத்தான்குளம் தாவீது சுந்தரனானந்தா் சபை மன்ற அளவில் திருமண்டல ஏழை, எளியவா்களுக்கு உதவும் வகையில் நிதி சோ்க்கும் வகையில் விற்பனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தாவீது சுந்தரனானந்தா் சபையைச் சோ்ந்த 19 சேகரத்தில் இருந்து சபை மக்கள் தயாரித்த பொருள்கள், உணவு பொருள்கள் மற்றும் மூலிகை குடிநீா், கபசுபக் குடிநீா் சூரணம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியை தூத்துக்குடி நாசரேத் திருமண்டில பேராயா் தேவசாகாயம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
நற்செய்தி அருள்பணி துறை இயக்குநா் ஆனந்த் சாமுவேல்ஜான்தாமஸ் முன்னிலை வகித்தாா். தாவீது சுந்தனானந்தா் சபை மன்றத் தலைவா் ஏசுவடியான்துரைச்சாமி வரவேற்றாா். ஆலயத்தில் பேராயா் தலைமையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதில் 19 சேகர குருவானவாகள், நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் குணசீலன், கிறிஸ்டோபா் ஜெயக்குமாா்,ஏ.ஆா். சசிகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...