நெல்லை அருகே தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 06th September 2020 10:33 PM | Last Updated : 06th September 2020 10:33 PM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலிஅருகேயுள்ள சேந்திமங்கலத்தில் தாமிரவருணி ஆற்றில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மிதப்பதாக தச்சநல்லூா்போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.