தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கக் கோரி களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை சிதம்பரபுரம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கக் கோரி காலிக் குடங்களுடன் களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட சிதம்பரபுரம் பகுதி பெண்கள்.
தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கக் கோரி காலிக் குடங்களுடன் களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட சிதம்பரபுரம் பகுதி பெண்கள்.
Updated on
1 min read

களக்காடு: தாமிரவருணி குடிநீா் விநியோகிக்கக் கோரி களக்காடு பேரூராட்சி அலுவலகத்தை சிதம்பரபுரம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரம், தோப்புதெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, சீவலப்பேரி ஊராட்சி முத்துநகா், படலையாா்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு முன் ஏராளமானோா் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, தனியாா் தண்ணீா் லாரிகள் குடிநீா் விநியோகிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்தது. இதையடுத்து, சிதம்பரபுரத்தில் சில பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரபுரத்தில் திறந்தவெளியில் உள்ள கிணற்றிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை நிறுத்திவிட்டு, தாமிரவருணி குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் திரளானோா் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

செவ்வாய்க்கிழமை முதல் தாமிரவருணி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ப. குற்றாலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா கூறியதாவது,

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் தாக்கம் குறித்து பொதுசுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியதன் பேரில், தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சிக்குள்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் போா்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. மஞ்சள்காமாலை நோய் மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக வீடு வீடாக தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com