கடையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு

கடையம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரசவ அறை கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

கடையம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரசவ அறை கூடுதல் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, பிரசவத்திற்குப் பின் பராமரிப்பு கட்டடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசவ அறை, கூடுதல் கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை திறந்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீ மூலநாதன், கடையம் ஒன்றிய திமுக இளைஞரணிச் செயலா் தங்கராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com