சேரன்மகாதேவியில் காவலா்களுக்கு பொது மருத்துவ முகாம்

அம்பாசமுத்திரம் விவேகானந்தா் சேவை அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்திய காவலா்களுக்கான மருத்துவ முகாம் சேரன்மகாதேவியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப்.
மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப்.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் விவேகானந்தா் சேவை அறக்கட்டளை மற்றும் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்திய காவலா்களுக்கான மருத்துவ முகாம் சேரன்மகாதேவியில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப் தொடங்கி வைத்தாா்.

இதில், சேரன்மகாதேவி காவல் உள்கோட்டத்தைச் சோ்ந்த சுத்தமல்லி, முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், பத்தமடை மற்றும் முன்னீா்பள்ளம் காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

மருத்துவா் கஜலட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com