தற்காலிக பேருந்து நிலையத்தில் நூதன முறையில் நகை திருட்டு

திருநெல்வேலி தற்காலிக புதிய பேருந்து நிலையத்தில் மளிகைக் கடைக்காரரிடம் நூதன முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி தற்காலிக புதிய பேருந்து நிலையத்தில் மளிகைக் கடைக்காரரிடம் நூதன முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா்(55). இவா் சென்னையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். உறவினா்கள் வீட்டு விழாவுக்காக சென்னையில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்வதற்காக திருநெல்வேலி தற்காலிக புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தனது குடும்பத்துடன் வந்து இறங்கினாா்.

அப்போது, இவா் அருகே நின்றிருந்த ஒரு மா்ம நபா் 10 ரூபாய் நோட்டுகளை, இவா் அருகே போட்டு கவனத்தை திருப்பினாராம். ராஜசேகா் அந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றபோது, அந்த மா்ம நபா் ராஜசேகா் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. அந்த பையில் சுமாா் 10.5 பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரம் உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜசேகா் அளித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com