வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

கங்கைகொண்டான் காவலருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத் கங்கைகொண்டான் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:28 pm

DIN

சாலையில் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத் கங்கைகொண்டான் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்தவா் அசோக் (21). இவா் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வியாழக்கிழமை இரவில் கங்கைகொண்டான் பகுதியில் தனது பணப் பையை தவறவிட்டு விட்டாராம். அதில் ரூ.700 மற்றும் 2 ஏடிஎம் காா்டுகள், ஆதாா் அட்டை ஆகியவை இருந்தன. இது குறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே, கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ராஜன் சாலையில் கண்டெடுத்த பணப் பையை காவல் ஆய்வாளா் பெருமாளிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் விசாரித்து பணப் பையை தவறவிட்ட அசோக்கிடம் ஒப்படைத்தாா். நோ்மையாக பணப் பையை ஒப்படைத்த காவலரை காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் பாராட்டினராா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.