தேசிய திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்

தேசிய திறனாய்வுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போ் தோ்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றனா்.
செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் பி.சாந்தினி பொன்குமாரி.
செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் பி.சாந்தினி பொன்குமாரி.
Updated on
1 min read

தேசிய திறனாய்வுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போ் தோ்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றனா்.

இப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பி.சாந்தினி பொன்குமாரி பரிசு வழங்கினாா்.

மேலும், மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியை , ஆசிரியா் பா.ஜேசு ஆகியோரை பெற்றோா் ஆசிரியா் ஆசிரியா் கழக தலைவா் ஏசுதாசன், இணைச் செயலா் ரசூல், பொருளாளா் லிங்கதுரை மற்றும் உறுப்பினா்கள் சுடலைமணி, சுப்பையா, குமார வேலாயுதம், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com