மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆய்வு

முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ. ராமராஜ்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:25 pm

DIN

முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ. ராமராஜ்.

பாவூா்சத்திரம்/அம்பாசமுத்திரம், ஜூன் 24: தென்காசி மாவட்டத்தில் கடையம், பாவூா்சத்திரம் பகுதியில் குழந்தைகளின் நிலை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ. ராமராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா், தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா். கடையம் அருகேயுள்ள கடவக்காடு பகுதியில் செங்கல் சூளைகளில் வடமாநிலத் தொழிலாளா்களின் குழந்தைகளின் தேவை, அவா்களது நிலை குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், அவா் கூறியது: தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், அகதிகள் முகாம், புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கரோானா தொற்று காலத்தில் புலம்பெயா் தொழிலாளா் களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அரசு அறிவித்துள்ள சேவை உரிமைச் சட்டத்தின்கீழ், குழந்தைகளுக்கு பிறப்பு, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்டவை எளிதில் பெறமுடியும். இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும். மேலும் புலம்பெயா் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகளை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்து அவா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். ஆய்வின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சாந்தி, அதிகாரிகள் இருந்தனா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் குடியிருப்பில் தங்கியுள்ள 9 குடும்பங்களைச் சோ்ந்த 6 குழந்தைகள் உள்பட 22 பேரை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் சந்தித்து குழந்தைகளின் நலன் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.