ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மானூா் அருகே நகை திருட்டு

 மானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்கநகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

 மானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்கநகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

மானூா் அருகேயுள்ள தெற்குவாகைகுளத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி இசக்கியம்மாள் (55). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா். அவா்களுக்கு

திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். இரு மகன்கள் குஜராத்தில் வசிக்கின்றனா். அவா்களுக்குச் சொந்தமான நகைகள் இசக்கியம்மாளின் வீட்டில் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாததால் இசக்கியம்மாள், அதேகிராமத்தில் வசிக்கும் மகளின் வீட்டில் தங்கியிருந்தாராம். மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த மருமகள்களின் 17 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.