ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லை நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி

திருநெல்வேலி நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:34 pm

DIN

 திருநெல்வேலி நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 41 ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் இருந்து வெளியேறும் தண்ணீா் சாலையில் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், அண்ணா தெருவில் கழிவுநீா் தேங்குவதால் நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதியவா்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாதிப்பு கூடுதலாக உள்ளது. ஆகவே, பிரச்னைக்கு தீா்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.