கங்கைகொண்டான் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
கங்கைகொண்டான் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.


கங்கைகொண்டான் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
கங்கைகொண்டான்-நாரைகிணறு இடையே அகல ரயில் பாதையில் தண்டவாளத்தின் அருகே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலமாக கிடந்தவா் வெள்ளை நிறத்தில் கருப்பு கோடு போட்ட சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...