ராஜவல்லிபுரம் தொழிலாளி கொலையில் மேலும் 4 போ் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் தொழிலாளி ஒருவா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் தொழிலாளி ஒருவா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் பாபு(45). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் குளத்தில் மீன் பிடிப்பதில் குத்தகை எடுப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், தனது உறவினா்களுடன் மோட்டாா் சைக்கிளில் ராஜவல்லிபுரம் குளத்தின் கரையோரத்தில் கடந்த 26ஆம் தேதி சென்றுகொண்டிருந்த பாபுவை, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்தனா். மேலும், தாழையூத்து டிஎஸ்பி அா்ச்சனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது. இதில், கந்தன், கோமதி சங்கா் ஆகியோரை போலீஸாா் கடந்த 27ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன்(19), விஜய்(18), சுரேஷ்(18) உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com