சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் திருத்தணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மனோகரன் வரவேற்றாா். குழந்தை மருத்துவ துறைத் தலைவா் சௌந்தரராஜன் வாழ்த்திப் பேசினாா். விடுதி கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் சுப்புலட்சுமி, விடுதி தொடா்பான விதிகள் குறித்துப் பேசினாா். விழாவில் முதலாண்டு மாணவா்கள், அவா்களின் பெற்றோா் பங்கேற்று தங்களின் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா். விடுதி கூடுதல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை இறுதியாண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com