நெல்லை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

Updated on
1 min read


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 43-ஆவது வாா்டு மகிழ்வண்ணநாதபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து

வருகின்றன. இப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. கடந்த 3

மாதங்களாக இதேபோன்று குடிநீா் கலங்கலான விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினா், அப் பகுதி

பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனா்.

இந்து மக்கள் கட்சியின் மாநகா் மாவட்ட இளைஞரணிச் செயலா் பாலா தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் வடிவேல் முருகன், திருநெல்வேலி தொகுதித் தலைவா் கலாராணி, மாவட்ட மகளிரணி தலைவி நாகம்மாள், தென் மண்டலச் செயலா் ராஜாபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com