நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் உலக காசநோய் தின விழா

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி நெஞ்சக நோய்ப்பிரிவு, தென்காசி காசநோய் மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நெஞ்சக நோய் பிரிவுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து, காசநோய் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் வெள்ளச்சாமி, காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை, நோயாளிகள் பின்பற்றவேண்டிய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, காசநோய்ப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. உலக காச நோய் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏற்பாடுகளை நெஞ்சக நோய்ப் பிரிவு மருத்துவா் நடராஜன், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா். இதில், நெஞ்சக நோய்பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள், மாவட்ட காசநோய் மைய பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். மாவட்ட நலக் கல்வியாளா் ஆ.மாரிமுத்துசாமி நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com