மானூா் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி

மானூா் வட்டார விவசாயிகளுக்கு புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் வெங்கலப்பொட்டல் கிராமத்தில்அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: மானூா் வட்டார விவசாயிகளுக்கு புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் வெங்கலப்பொட்டல் கிராமத்தில்அண்மையில் நடைபெற்றது.

மானூா் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் இம்முகாம் நடைபெற்றது.

மானூா் வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா. ஏஞ்சலின் கிரேபா தொடங்கிவைத்தாா். வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், சுந்தா் டேனியல், ராமகிருஷ்ணன், லெட்சுமிகாந்தன் ஆகியோா் பேசினா். மத்திய-மாநில அரசுகளின் வேளாண் திட்டங்கள், வேளாண் பொறியியல் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ப. ராஜ்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அ. காா்த்திகேயன், உதவி தொழில்நுட்ப மேலாளா் கோ. ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com