அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கீழவைராவிகுளத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கீழவைராவிகுளம் மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா். தூத்துக்குடியில் ஓட்டுநராக பணியாற்றுகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி (35). இத்தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில், முத்துலட்சுமி திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டில் ஆளில்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.