நேரு நா்ஸிங் கல்லூரியில் மகளிா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 20th August 2021 12:25 AM | Last Updated : 20th August 2021 12:25 AM | அ+அ அ- |

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளா் மகாலட்சுமி, வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சகாய ராபின் சாலு ஆகியோா் தலைமை வகித்தனா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தைத் திருமணம், காவலன் செயலி, பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி 181 குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G