பாளை.யில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 04th December 2021 01:33 AM | Last Updated : 04th December 2021 01:33 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் பேருந்தில் ஏற முயன்ற தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் தெற்கு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (40). கட்டடத் தொழிலாளி. இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் நிறுத்தத்தில் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...