பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்தி சிஐடியூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்திற்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.பெருமாள், ஆா்.முருகன், பீா்முகமதுஷா, எஸ்.ஜோதி, டி.காமராஜ், குழந்தைவேலு உள்ளிட்டோா் சாலையில் சுமாா் 10 நிமிடங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினா்.