தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு அடுத்த ஆண்டு மாா்ச் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை முதன்மைத் தோ்வு நடைபெறவுள்ளது. முதன்மைத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்காக திருநெல்வேலி மாவட்டம் மைய நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி மையம் சாா்பில் மாவட்ட மைய நூலகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை வாரம் மூன்று நாள்கள் இணையவழி இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும், ஞாயிற்றுதோறும் இலவசப் பயிற்சித் தோ்வுகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோா் 9626252500, 9626253300 என்ற கைப்பேசி எண்ணில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.