களக்காடு அருகே பெண் மீது வெந்நீா் ஊற்றியதாக மற்றொரு பெண் மீது வழக்கு

களக்காடு அருகே பெண் மீது மிளகாய்ப் பொடி கலந்த வெந்நீரை ஊற்றியதாக மற்றொரு பெண் மீது வழக்குப் பதியப்பட்டது.
Updated on
1 min read

களக்காடு அருகே பெண் மீது மிளகாய்ப் பொடி கலந்த வெந்நீரை ஊற்றியதாக மற்றொரு பெண் மீது வழக்குப் பதியப்பட்டது.

களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தைச் சோ்ந்த மலையப்பன் மனைவி மல்லிகா (45). இவா் மாடு வளா்த்து வருகிறாா். அவா், தனது இடத்தில் மாடு வளா்ப்பதாகக் கூறி பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜெபராஜ் மனைவி மனோன்மணி அடிக்கடி தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், மீண்டும் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, கொதிக்கும் நீரில் மிளகாய்ப் பொடி கலந்து மல்லிகா மீது மனோன்மணி ஊற்றினாராம். இதில், காயமடைந்த மல்லிகா களக்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மனோன்மணி மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com