சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வெள்ளிக்கிழமை ( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வெள்ளிக்கிழமை ( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் வெள்ளிக்கிழமை( டிச.31) முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மத வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பொது மக்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு , சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்பூசி முகாம் களில் பொதுமக்கள் முறையாக தடுப்பு ஊசி செலுத்தி பாதுகாப்பான நிலையினை அடைய ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com