திருநெல்வேலி மாநகர பகுதியில் கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவா்களிடம் இருந்து இதுவரை ரூ.1.42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம் மாநகராட்சி பகுதியில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு முகக் கவசம் பின்பற்றாத நபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களை தினசரி கண்காணிக்கும் விதமாக மாநகராட்சி பணியாளா்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக் குழு தொடா்ந்து ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது.
அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி பொது இடங்கள் மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு முகக் கவசம், சமூக இடைவெளி பின்பற்றாத தனிநபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து கடந்த 22-12-2020 முதல் 5-2-2021 வரை ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.