திருநெல்வேலி நகரத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(54). இவா் தனது மோட்டாா் சைக்கிளை வியாழக்கிழமை இரவு வழக்கம்போல தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாராம். வெள்ளிக்கிழமை காலையில் பாா்த்த போது மோட்டாா் சைக்கிள் முழுவதும் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.