நாரணம்மாள்புரத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
By DIN | Published On : 14th February 2021 01:09 AM | Last Updated : 14th February 2021 01:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் பல்நோக்கு கட்டடம் கட்ட திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்தக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ். லட்சுமணன் தலைமை வகித்து திறந்துவைத்தாா். சங்கா்நகா் முன்னாள் பேரூராட்சித் தலைவா் பேச்சிபாண்டியன், நாரணம்மாள்புரம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகேசன், எஸ்.பி.முத்துராமன், எம்.சுப்பிரமணியன், நகர திமுக செயலா் செல்வபாபு, பாஸ்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.